Tuesday, August 22, 2006

சென்னை மாநகரம் - பேரூந்து பயணம்

நான் மட்டுமல்ல, பல பேர், ஒரு நாளல்ல, தினமும்...
காலையும்... மாலையும்....
பேரூந்தின் படிகளில் பயணப்படும்...
இளைஞர்கள்...
பெரியோர்கள்..
மாணவர்கள்...
ஏன்? பெண்கள்....

நான் நிற்பது கீழிருந்து இரண்டாம் படி...
எனக்குக் கீழே.. நம்புங்கள்.. பத்து பேர்....
ஒரு கையும், ஒரு காலும் தான் பேருந்தில்...
உடல் காற்றில்... உயிர்?

60 பேர் பயணப்பட வேண்டிய ஊர்தியில்..
குறைந்தது... 250 பேர்....

ஏன் இந்த போராட்டம்... தினமும்...

உதாரணம்:

வேளச்சேரி செக்போஸ்ட் [Velcheri Checkpost] நிறுத்தத்தில் ஒரு நாள் காலை வந்து பாருங்கள்....

காரணம்:
1. பேரூந்து பற்றாக்குறை மட்டுமல்ல....
2. அந்த வேளைகளில் குறைவான பேருந்துகள் இயக்கம்...
3. இதற்க்கு முதல்வரோ... போக்குவரத்துத் துறை அமைச்சரோ பொறுப்பல்ல...
அந்தந்த தடங்களில் பணியாற்றும் அதிகாரிகள், பேரூந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள்.

தீர்வு:
1. காலை 8.00 - 10.00 வேளையில் அதிகமான பேரூந்துகளை இயக்குவது...
2. 5 நிமிடத்திற்க்கு ஒரு முறை.. ஒன்றல்ல.. 3 - 5 பேரூந்துகளை தொடர்ச்சியாக இயக்குவது...




No comments: